Monday, November 2, 2009

டிராகுலாவின் காதலி 1


The blood is the life ... and it shall be mine
- Bram Stoker's The Dracula by Francis Ford Coppola


நீ டிராகுலா
நான் உன் காதலி
நம் உறவு ரத்த சம்பந்தமானது
ஓர் இரவில் ஒரு முழு பாட்டில் சிவப்பு வைன் குடித்தாய்
அதனால்
நீ வேறொரு காலத்திலிருந்து என்னுடன் பேச முயற்சிக்கிறாய்
உன்னை விட்டு விலகியிருக்கும் சக்தி
இதற்கு மேல் எனக்கு இல்லை என்பதால்
உன்னை காதலிப்பதாக ஒப்புக்கொள்கிறேன்
ஏனெனில் நான் பொய்யை நம்புகிறேன்
இரைகளைத் தேடியலைய வடிவமைக்கப்பட்டிருக்கும் உன்னையும்
இந்தக் கடவுள் இனி எப்போது வருவான் எனும் என்னையும்
மனித ரத்தத்தைக் குடிக்கும் பொழுது மதுவின் பைத்தியக்கார போதை துவங்கி
நம்மை நிறுத்த விடாமல் செய்கிறது
எனினும் நீ சைவக் காட்டேரி
மனித ரத்தம் அருந்த மறுப்பதால்
தயிர்சாதம்
நான் குறி சொல்லும் கடந்தகாலமும் மாறுதலுக்குரியது
என்னை முதுகில் சுமந்து கொண்டு
பைன் மரங்களைத் தாவி ஏறுபவன்
மனிதானாக இருந்தால் என்ன
ரத்தக் காட்டேரியாக இருந்தால் என்ன
இப்போதாவது ஒப்புக்கொள்
நான் துயில்வதை கவனிப்பது உனக்குப் பிடித்திருக்கிறது
மேலும் அந்நிலை உன்னை என் ரத்தத்தைக் குடிக்க விடாமல் செய்கிறது
இந்தப் பூவுலகில் எந்த நாயகனும் என்னுள்
இப்படி இறங்கியதில்லை
நான் உறங்கும்பொழுது

(தொடரும்)

Monday, October 26, 2009

இக்கணம் இக்கதை

அந்த லாரி ஒரு சிங்கத்தைப் போல் அவன் மீது பாய்ந்தது. அவன் ஆங்கிலக் கதைகள் மட்டுமே படிப்பவன் ... தமிழ் கதைகளும் படிப்பவனாக இருந்தால் குறைந்தபட்சம் உயிரோடாவது இருந்திருப்பான். இந்தக் கதை முடிவதற்குள் இதை நீரூபிக்கப் போகிறேன்.

அவன் படித்த முதல் கதை Mario Puzo-வின் The Godfather (அவன் வயதிற்கு வராததற்கு முன் படித்த Enid Blyton, Nancy Drew எல்லாம் இதில் இணைக்கவில்லை). அசந்து போனான். பிறகு அந்தத் தொடரில் வெளியான The Sicilian, The Last Don ஆகியவற்றோடு அல்லாமல் Puzo திரைக்கதை அமைத்தார் என்பதற்காகவே Superman, Superman II திரைப்படங்களை விரும்பிப் பார்த்தான். Superman மற்றும் பிற superhero படங்களிலேயே சிறந்தது இவ்விரண்டு தான் என்பான். Puzo-வின் Fools Die, The Family எல்லாம் படிப்பதற்குள் பாவம் செத்துப் போய்விட்டான்.

அவனுக்கு பிடித்த சிறுகதை எழுத்தாளர் Jeffrey Archer. அவருடைய A Twist in the Tale சிறுகதைத் தொகுதியை எத்தனையோ முறை படித்திருப்பான் ... குறிப்பாக அந்தத் தொகுப்பின் The Perfect Murder கதையை. Robert Ludlum-இன் The Apocalypse Watch கூட அவனுக்குப் பிடித்த கதை தான். விஞ்ஞானப் புனைகதைகளில் அவனுக்கு பிடித்தது Isaac Asimov ... அவரின் What If என்ற fantasy புனைவு அவனுக்கு மிகவும் விருப்பம். சரி அதை விடுங்கள், அவன் ஏன் சாகாமல் இருந்திருக்கலாம் என்பதற்கான காரணத்தைப் பார்ப்போம்.

தான் படித்த மற்றும் படிக்காத கதைகள் மற்றும் எழுத்தாளர்கள் பற்றி மற்றவர்களிடம் Name-dropping செய்வது அவன் வழக்கம். மேலே சொன்ன பட்டியலில் எதைப் படித்தானோ எதை விட்டானோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் அவன் சொன்ன இந்தப் பெயர்களால் நான் வசீகரிக்கப்பட்டேன். என்னுடைய ஒரு சிறுகதையின் பிரதியை அவனிடம் கொடுத்து படித்து கருத்து தெரிவிக்கச் சொன்னேன். “நான் தமிழெல்லாம் படிக்கறதில்லைங்க”, என்று ஸ்வாரஸ்யமில்லாமல் ஆனால் சாதாரணமாகச் சொன்னான். “இந்தக் கதையை ஒரு போட்டிக்கு அனுப்பலாம்னு இருக்கேன்”, என்றேன். மீண்டும் ஸ்வாரஸ்யமில்லாமல் ஆனால் சாதாரணமாக ... இந்த முறை புன்னகைத்தான். "Please", என்று நான் சொன்ன ஆங்கில வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து என்று நினைக்கிறேன், என் கதையை வாங்கிக் கொண்டான். அப்போது அவன் கையில் இருந்த அந்த புத்தகத்தை கவனித்தேன். O Henry என்ற பெயர் மட்டும் புலப்பட்டது. ம்ஹூம், நிச்சயமாக என் கதையைப் படிக்க மாட்டான்.

சாலையைக் கடந்து போய் கல்லூரிக்கு எதிரில் இருந்த அந்த டீக்கடை பெஞ்சில் அமர்ந்தான். நான் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் கதையைக் கையிலெடுத்தான். ‘படிக்கப் போகிறானா ... என்ன ... அவன் முதல் தமிழ் கதையை ...’. பத்தே செகண்டுகள் தான், வெறுப்போடு என் கதையைக் கீழே எறிந்துவிட்டு O Henry எடுத்து லயித்து வாசிக்கத் தொடங்கினான். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அசதியாகத் திரும்பிய போது அந்தக் கூச்சலைக் கேட்டேன்.

அந்த லாரி ஒரு சிங்கத்தைப் போல் அவன் மீது பாய்ந்தது. அவன் ஆங்கிலக் கதைகள் மட்டுமே படிப்பவன் ... தமிழ் கதைகளும் படிப்பவனாக இருந்தால் குறைந்தபட்சம் உயிரோடாவது இருந்திருப்பான். O Henry கதையில் மூழ்கியிருந்ததால் அவன் சிங்கத்தை கவனிக்கவில்லை ... உறுமல் சப்தம் கூடக் கேட்கவில்லை. என் தமிழ் கதையைப் படித்திருக்கலாம். நான் அவனுக்கு வாசிக்கக் கொடுத்தது ... இக்கணம் இக்கதை.

சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 - நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

Friday, October 16, 2009

அகநாழிகையில் ...

என்னுடைய ஸ்தலபுராணம் மற்றும் ஒரு நாள் கூத்து படைப்புகள், அக்டோபர் 2009 அகநாழிகை இதழில் வெளியாகியிருக்கி்ன்றன.

Tuesday, October 6, 2009

ரயில்விலங்கு

என்னுடைய ரயில்விலங்கு ஓடிக் கடக்கும் மலைப்பிரமிட்கள் படைப்பு, இந்த வார உயிரோசை இதழில் வெளியாகியிருக்கி்றது.

Thursday, October 1, 2009

ஆட்டம்

என்னுடைய ரயிலாட்டம் படைப்பு, இந்த வார உயிரோசை இதழில் வெளியாகியிருக்கி்றது.

Thursday, September 24, 2009

ரயில்விலங்கு ஓடிக் கடக்கும் மலைப்பிரமிட்கள்

என் கவிதைகளுக்காக் காத்திருக்கும் எனக்கு
நானே எழுதிக் கொள்வது என்னவென்றால் ...

பனிக்காற்று கசியும் துவாரங்கள் வழி
தப்பியோடப் பார்க்கும் ரயில்நீளக் கனவுகள் காண்பவன்
ரயில்கூரையில் மழைச்சலங்கைகளின் நர்த்தன இசையுடன்
மழையோசை கேட்டு எழுந்து
எழுதிய கவிதை
ரயில்விபத்தில் சிதைந்த உடல் போல் இருந்ததாகப்
படிக்காதவர்கள் சொன்னார்கள்

ரயில்விலங்கு ஓடிக் கடக்கும்
மேற்கே கிடக்கும் அடுக்குத் தொடர் மலைப்பிரமிட்களை
முள்வெளிக்காட்டில் நகரும் வயல்மயில் பார்த்துச் சொன்னது
என்னால் இழக்க முடிந்த உயரம் இவ்வளவு தான் என்று

வரிசைகக்கிரமம் மாறி எல்லாத் தவறுகளையும் செய்யத் துணிபவன்
பயணிக்கிறான்
ரோஜாப்பிணங்கள் தொங்கும் தோட்டம் நோக்கி
ஏனெனில்
அவள் இதழ் lipstick ஒத்திருக்கும் பூஇதழ் gradient
பழுப்புமது வழியும் தார்கிண்ணம்
தாண்டிய ஈ மொய்க்கும்
ரோஜாக்குவளைத் தேநீர்
மற்றும்
அங்கே super-macro கண்கள் பார்க்கும் பூக்கள்
அழகாகத் தெரியும் என்பதால்

எம் மக்கள் சறுக்கி விளையாடும் பைன்காடு காலடி green algae
சூப்பர் சந்தோஷம் தரும்
waxworld வீரப்பன் தத்ரூபம் மீட்டுத் தரும் சரித்திரம் மறந்து
கண்ணாடிப்பனிஓவியம் என்ற சொல்லில் பனியையும் ஓவியத்தையும் புணர விடாமல் செய்கிறான்
யாரோவொரு Edward Scissorhands செதுக்கிய முயல்புற்சிற்பம் நிற்கும்
Italian Gardenஇல் மலர்ந்த பச்சை / வயலெட் முட்டைகோஸ் ரோஜாக்கள் ரசிப்பவன்

அவன் மேலும் எழுதினான் ...

எனக்கு பூனைகளைப் பிடிக்காது
பொதுவாக என்றாலும் இந்தக் கோயில்பூனை பிடித்திருக்கிறது

புல்வெளி மேயும் கருப்புAngel
காக்காய் உட்கார மின்பழம் விழுந்தது
காக்காயும் விழுந்தது

மலையுச்சியில் நடப்பட்ட இரும்பு கோபுரத்தின் உயரத்தை
AMSL கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்

சிட்டுக்குருவிகளைப் பார்த்து நாளாகிறது என்பதை
அடுத்த முறை சிட்டுக்குருவிகளைப் பார்க்கும் வரை உணர முடிவதில்லை

இந்த முறை சூரியனைச் சிதறுதேங்காய் போடும் மேகங்கள்
vaginaபோல உருக்கொண்டிருக்கின்றன

தனிக்கல்மரம் சூழ்ந்த மனிதத்தோப்பின் தொடுவானம் நிஜம்

peacock துரத்தும் peahen பார்க்கக் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்

தொட்டபெட்டாவில் இருப்பது suicide-point அல்ல view-point

பைகாரா ஏரியின் வகுத்த எல்லைக்குள் போகும் எந்திரப்படகு ஒரு வினாடி நீர்மூழ்கிக் கப்பலானது

சுழி சுத்தமான ஒன்றரை லட்சம் ரூபாய் குதிரையில் ஐந்து ரூபாய் சவாரி பேரம்
சாஸ்வதம் சமாதானம்

அவன் வீடு திரும்பும்போது கண்ட அதிசயங்கள் ...

குன்றில் மேலிட்ட விளக்குகள்
பூமியிலும் நட்சத்திரங்கள்

அவன் வீடு திரும்பிய பிறகு கண்ட அதிசயங்கள் ...

மதில் சுவற்றினில் மலர்ந்த செடி
தென்னை மர வளைவுப் பாதையில் ஓடும் அணில்

ரயிலின்றி அமையாது உலகு

Tuesday, September 22, 2009

முட்டைகள்

என்னுடைய எஃகு முட்டைகள் படைப்பு, இந்த வார உயிரோசை இதழில் வெளியாகியிருக்கி்றது.