Tuesday, December 1, 2009

டிராகுலாவின் காதலி 3



I was ninety-nine point nine percent sure I was dreaming.
Bella Swan, New Moon, Chapter 1, p.3
- Stephenie Meyer

நாக்கு நீண்டவன் சொல்கிறான்
விடிந்தால் இரவு விடியாவிட்டால் பகல்
என்று வாழும்
போல்டர்கீஸ்டின் mind over matter சக்தி வேண்டி
இருந்த தவம் சாபத்தில் முடிந்ததும்
காட்டேரியின் கடிக்கு TT booster injection
போட்டுக் கொண்டு பாதுகாப்பாக உணரும்
என் துயரம் மெல்லென நகரும்
வௌவால்களின் தலைகீழ் உலகில்
டிராகுலாவின் ரத்தம் குடித்த
துர்மரணத் தூதுவர்களின் சப்தம் கேட்டு
திடுக்கிட்டு விழித்தெழுகிறான்
அவள் கனவில் இவன்
ரத்தத்தின் சிவப்பணுக்கள் வெள்ளை அணுக்களை புணரும் சமயம்
எவன் கனவில்
விழித்துக் கொள்வாளோ இவள்

Tuesday, November 10, 2009

டிராகுலாவின் காதலி 2



Don’t you want to know if I drink blood?
Edward Cullen to Bella Swan, Twilight, Chapter 9, p.186
- Stephenie Meyer

இருளின் சக்தி கொண்டு
என் சாவில் இருந்து மீண்டெழுவேன்
அவள் சாவைப் பழிவாங்க
என்றவன்
நான்கு நூற்றாண்டுகள் கழித்துத் திரும்பி வந்த காதல் கதையின்
பைத்தியக்கார விடுதியில் எஜமான் சொல் கேட்டு
சிலந்தி, கரப்பான்பூச்சி, மண்புழு, ஈ உண்டு வாழ்பவன்
பூனைகள் தின்னக் கிடைத்தால் அருமை என்றான்
மின்னல் கோட்டோவியங்கள் பூத்துச் சாகும்
ஆகாயக் கண்கள் வேவு பார்க்கும்
ஓநாய்களின் இசையை ரசிக்க நுண்ணுணர்வு வேண்டும் என்றான்
நெஞ்சடைக்கும் அதீத போதையில்

மெத்தை மேல் கொலுசொலிக்கும் மென்பாதச் சுவடுகள் நகரும்
உன் ஹிப்னாடிச அழைப்பு என்னை உன்னைப் பார்க்கத் தூண்டுகிறது
மீண்டும்
பேய் வேகத்தில்
என் நிழல் நகரும் முன் நான் நகர்ந்து
உன் குரலிலேயே பேசத் தொடங்குவேன் உன்னிடமே

"கடவுளின் பைத்தியக்காரக் குழந்தைகள் தான் எல்லோரும்", என்று

(தொடரும்)

Monday, November 2, 2009

டிராகுலாவின் காதலி 1


The blood is the life ... and it shall be mine
- Bram Stoker's The Dracula by Francis Ford Coppola


நீ டிராகுலா
நான் உன் காதலி
நம் உறவு ரத்த சம்பந்தமானது
ஓர் இரவில் ஒரு முழு பாட்டில் சிவப்பு வைன் குடித்தாய்
அதனால்
நீ வேறொரு காலத்திலிருந்து என்னுடன் பேச முயற்சிக்கிறாய்
உன்னை விட்டு விலகியிருக்கும் சக்தி
இதற்கு மேல் எனக்கு இல்லை என்பதால்
உன்னை காதலிப்பதாக ஒப்புக்கொள்கிறேன்
ஏனெனில் நான் பொய்யை நம்புகிறேன்
இரைகளைத் தேடியலைய வடிவமைக்கப்பட்டிருக்கும் உன்னையும்
இந்தக் கடவுள் இனி எப்போது வருவான் எனும் என்னையும்
மனித ரத்தத்தைக் குடிக்கும் பொழுது மதுவின் பைத்தியக்கார போதை துவங்கி
நம்மை நிறுத்த விடாமல் செய்கிறது
எனினும் நீ சைவக் காட்டேரி
மனித ரத்தம் அருந்த மறுப்பதால்
தயிர்சாதம்
நான் குறி சொல்லும் கடந்தகாலமும் மாறுதலுக்குரியது
என்னை முதுகில் சுமந்து கொண்டு
பைன் மரங்களைத் தாவி ஏறுபவன்
மனிதானாக இருந்தால் என்ன
ரத்தக் காட்டேரியாக இருந்தால் என்ன
இப்போதாவது ஒப்புக்கொள்
நான் துயில்வதை கவனிப்பது உனக்குப் பிடித்திருக்கிறது
மேலும் அந்நிலை உன்னை என் ரத்தத்தைக் குடிக்க விடாமல் செய்கிறது
இந்தப் பூவுலகில் எந்த நாயகனும் என்னுள்
இப்படி இறங்கியதில்லை
நான் உறங்கும்பொழுது

(தொடரும்)

Monday, October 26, 2009

இக்கணம் இக்கதை

அந்த லாரி ஒரு சிங்கத்தைப் போல் அவன் மீது பாய்ந்தது. அவன் ஆங்கிலக் கதைகள் மட்டுமே படிப்பவன் ... தமிழ் கதைகளும் படிப்பவனாக இருந்தால் குறைந்தபட்சம் உயிரோடாவது இருந்திருப்பான். இந்தக் கதை முடிவதற்குள் இதை நீரூபிக்கப் போகிறேன்.

அவன் படித்த முதல் கதை Mario Puzo-வின் The Godfather (அவன் வயதிற்கு வராததற்கு முன் படித்த Enid Blyton, Nancy Drew எல்லாம் இதில் இணைக்கவில்லை). அசந்து போனான். பிறகு அந்தத் தொடரில் வெளியான The Sicilian, The Last Don ஆகியவற்றோடு அல்லாமல் Puzo திரைக்கதை அமைத்தார் என்பதற்காகவே Superman, Superman II திரைப்படங்களை விரும்பிப் பார்த்தான். Superman மற்றும் பிற superhero படங்களிலேயே சிறந்தது இவ்விரண்டு தான் என்பான். Puzo-வின் Fools Die, The Family எல்லாம் படிப்பதற்குள் பாவம் செத்துப் போய்விட்டான்.

அவனுக்கு பிடித்த சிறுகதை எழுத்தாளர் Jeffrey Archer. அவருடைய A Twist in the Tale சிறுகதைத் தொகுதியை எத்தனையோ முறை படித்திருப்பான் ... குறிப்பாக அந்தத் தொகுப்பின் The Perfect Murder கதையை. Robert Ludlum-இன் The Apocalypse Watch கூட அவனுக்குப் பிடித்த கதை தான். விஞ்ஞானப் புனைகதைகளில் அவனுக்கு பிடித்தது Isaac Asimov ... அவரின் What If என்ற fantasy புனைவு அவனுக்கு மிகவும் விருப்பம். சரி அதை விடுங்கள், அவன் ஏன் சாகாமல் இருந்திருக்கலாம் என்பதற்கான காரணத்தைப் பார்ப்போம்.

தான் படித்த மற்றும் படிக்காத கதைகள் மற்றும் எழுத்தாளர்கள் பற்றி மற்றவர்களிடம் Name-dropping செய்வது அவன் வழக்கம். மேலே சொன்ன பட்டியலில் எதைப் படித்தானோ எதை விட்டானோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் அவன் சொன்ன இந்தப் பெயர்களால் நான் வசீகரிக்கப்பட்டேன். என்னுடைய ஒரு சிறுகதையின் பிரதியை அவனிடம் கொடுத்து படித்து கருத்து தெரிவிக்கச் சொன்னேன். “நான் தமிழெல்லாம் படிக்கறதில்லைங்க”, என்று ஸ்வாரஸ்யமில்லாமல் ஆனால் சாதாரணமாகச் சொன்னான். “இந்தக் கதையை ஒரு போட்டிக்கு அனுப்பலாம்னு இருக்கேன்”, என்றேன். மீண்டும் ஸ்வாரஸ்யமில்லாமல் ஆனால் சாதாரணமாக ... இந்த முறை புன்னகைத்தான். "Please", என்று நான் சொன்ன ஆங்கில வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து என்று நினைக்கிறேன், என் கதையை வாங்கிக் கொண்டான். அப்போது அவன் கையில் இருந்த அந்த புத்தகத்தை கவனித்தேன். O Henry என்ற பெயர் மட்டும் புலப்பட்டது. ம்ஹூம், நிச்சயமாக என் கதையைப் படிக்க மாட்டான்.

சாலையைக் கடந்து போய் கல்லூரிக்கு எதிரில் இருந்த அந்த டீக்கடை பெஞ்சில் அமர்ந்தான். நான் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் கதையைக் கையிலெடுத்தான். ‘படிக்கப் போகிறானா ... என்ன ... அவன் முதல் தமிழ் கதையை ...’. பத்தே செகண்டுகள் தான், வெறுப்போடு என் கதையைக் கீழே எறிந்துவிட்டு O Henry எடுத்து லயித்து வாசிக்கத் தொடங்கினான். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அசதியாகத் திரும்பிய போது அந்தக் கூச்சலைக் கேட்டேன்.

அந்த லாரி ஒரு சிங்கத்தைப் போல் அவன் மீது பாய்ந்தது. அவன் ஆங்கிலக் கதைகள் மட்டுமே படிப்பவன் ... தமிழ் கதைகளும் படிப்பவனாக இருந்தால் குறைந்தபட்சம் உயிரோடாவது இருந்திருப்பான். O Henry கதையில் மூழ்கியிருந்ததால் அவன் சிங்கத்தை கவனிக்கவில்லை ... உறுமல் சப்தம் கூடக் கேட்கவில்லை. என் தமிழ் கதையைப் படித்திருக்கலாம். நான் அவனுக்கு வாசிக்கக் கொடுத்தது ... இக்கணம் இக்கதை.

சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 - நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

Friday, October 16, 2009

அகநாழிகையில் ...

என்னுடைய ஸ்தலபுராணம் மற்றும் ஒரு நாள் கூத்து படைப்புகள், அக்டோபர் 2009 அகநாழிகை இதழில் வெளியாகியிருக்கி்ன்றன.

Tuesday, October 6, 2009

ரயில்விலங்கு

என்னுடைய ரயில்விலங்கு ஓடிக் கடக்கும் மலைப்பிரமிட்கள் படைப்பு, இந்த வார உயிரோசை இதழில் வெளியாகியிருக்கி்றது.

Thursday, October 1, 2009

ஆட்டம்

என்னுடைய ரயிலாட்டம் படைப்பு, இந்த வார உயிரோசை இதழில் வெளியாகியிருக்கி்றது.